திருத்தகுசீர் அதிகைஅருள் தலத்தின் ஓங்கும்
சிவக்கொழுந்தின் அருட்பெருமைத் திறத்தால் வாய்மை
உருத்தகுமெய் உணர்ச்சிவடி வாகிச் சைவ
ஒளிவிளங்க நாவரசென் றொருபேர் பெற்றுப்
பொருத்தமுற உழவாரப் படைகைக் கொண்ட
புண்ணியனே நண்ணியசீர்ப் புனித னேஎன்
கருத்தமர்ந்த கலைமதியே கருணை ஞானக்
கடலேநின் கழல்கருதக் கருது வாயே
சிவக்கொழுந்தின் அருட்பெருமைத் திறத்தால் வாய்மை
உருத்தகுமெய் உணர்ச்சிவடி வாகிச் சைவ
ஒளிவிளங்க நாவரசென் றொருபேர் பெற்றுப்
பொருத்தமுற உழவாரப் படைகைக் கொண்ட
புண்ணியனே நண்ணியசீர்ப் புனித னேஎன்
கருத்தமர்ந்த கலைமதியே கருணை ஞானக்
கடலேநின் கழல்கருதக் கருது வாயே
மேன்மையுடைய சிறந்த திருவதிகை என்ற அருள் நிறைந்த திருப்பதியில்
விளங்கும் சிவபரம்பொருளின் திருவருட் பெருமையால் சத்தியத்தின் மெய்
உணர்வின் வடிமான சைவ நெறியில் ஒளி விளங்க திருநாவுக்கரசர் எனும் பெயர் தாங்கி மேற்கொண்ட நெறிக்கு தக்கப்படி உழவார படைகையில் ஏந்திய
புண்ணியனே! சிறந்த புண்ணியனே புனிதமானவனே தூயவனே என் கருத்தமர்ந்த கலை, ஒளிக் கலை யுடைய சந்திரனே,கருணை மிகுந்த ஞானகடலே உன் திருவடியை
எந்நாளும் நினைந்து துதித்திட உன்னருள் தருவாயே!
விளங்கும் சிவபரம்பொருளின் திருவருட் பெருமையால் சத்தியத்தின் மெய்
உணர்வின் வடிமான சைவ நெறியில் ஒளி விளங்க திருநாவுக்கரசர் எனும் பெயர் தாங்கி மேற்கொண்ட நெறிக்கு தக்கப்படி உழவார படைகையில் ஏந்திய
புண்ணியனே! சிறந்த புண்ணியனே புனிதமானவனே தூயவனே என் கருத்தமர்ந்த கலை, ஒளிக் கலை யுடைய சந்திரனே,கருணை மிகுந்த ஞானகடலே உன் திருவடியை
எந்நாளும் நினைந்து துதித்திட உன்னருள் தருவாயே!

No comments:
Post a Comment