Tuesday, 13 November 2012

ஆளுடைய நம்பிகள் அருண்மாலை


மதியணிசெஞ் சடைக்கனியை மன்றுள்நடம் புரிமருந்தைத்
துதியணிசெஞ் சுவைப்பொருளில் சொன்மாலை தொடுத்தருளி
விதியணிமா மறைநெறியும் மெய்ந்நிலைஆ கமநெறியும்
வதியணிந்து விளங்கவைத்த வன்தொண்டப் பெருந்தகையே

வான் தொண்டர் என்ற திருப்பெயரை உடைய 
சுந்தர மூர்த்தி பெருந்தகையே!
பிறைச்சந்திரனை சடையில் அணிந்த கனி போன்றவனும் தில்லையம்பலத்துள் நடம் செய்யும் மருந்தை போன்றவனுமான சிவபெருமானை துதிப்பதை பாமாலை சுட்டுவதையே பொருளாக கொண்டு செஞ்சொற்பாமாலை பல பாடி விதிகள் பொருந்திய வைதீக நெறி கூறும் மறைகள் மெய்நிலை கூறும் ஆகம நெறியும் நிலைமாறு செய்து
உலகம் உய்ய அருள் செய்தவரே உன்னை வணங்குகிறேன் அருள்க!


No comments:

Post a Comment