Tuesday, 30 October 2012

தந்தை மொழி தமிழ்

ஒரு முறை சங்கராச்சாரியார் வடலூர் வந்து நம் வள்ளல் பெருமானிடம் வாதிட்டார்! சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய் பாஷை என்று 
பல்வேறு சான்றுகளை கூறி நீண்ட நேரம் உரையாற்றினார்! அவர் பேசுவதை 
பொறுமையோடு  கேட்ட வள்ளல் பெருமான் அவர் கூற்றை எதுவும் 
மறுக்கவில்லை! ஆமோதித்தார் . முடிவில் ஒன்றே  ஒன்று என்று 
சங்கராசார்யரிடம் கூற அவர் வியப்பில் ஆழ்ந்தார்!

வரும்போது வள்ளலாரிடம் நிறைய வாதம் செய்யலாம் என எண்ணி 
வந்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது! கூடியிருந்தவருக்கு வாத போர் 
நடக்கவில்லையே என்று ஏமாற்றம்! சங்கராச்சாரியார் பேசி முடித்ததும் 
வள்ளலார், நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மையே மறுபதற்கு 
ஒன்றும் இல்லை எனவும் வந்தவர் பெருமகிழ்ச்சி அடைந்து ஆனந்த 
கூத்தாடினார்! ஆனால் ஒன்று என்று வள்ளலார் கூறலானார்! சமஸ்கிருதம் 
தாய் சரி தான்! தாய் என்று எப்போது அழைப்போம்? தந்தை என்று ஒருவர் 
இருந்தால் அல்லவா தாய் என்று ஒருவள் இருக்க முடியும்!?  தந்தை 
மொழி தான் தமிழ் என்று கூற, தகுந்த எடுத்துக்காட்டு களுடன் விளக்க 
சங்கராச்சாரியார் உட்பட அனைவரும் முழு மனதோடு ஏற்று கொண்டனர்! 
தம்மில் - நம்மில் அமிழ்ந்து இருப்பதால் இது தமிழ்!  தமிழே அதிவிரைவில் 
சுத்த சிவானு பூதியை நல்க வல்லது! இது தெய்வீக தமிழ் மொழி என்று 
கூறினார் திரு அருட்பிரகாச வள்ளலார்! தமிழ் சங்கம் கண்டது புலவர்களை மட்டுமல்ல! ஞானிகளை சித்தர்களை தமிழ் கடவுள் முருக பெருமானை! 
சிவபெருமானே வந்து வாதம் புரிந்தது மதுரையிலே தான்! தெய்வமே வந்து 
போற்றி புகழ்ந்தது தமிழை தான்! தமிழே ஞானம்! 



சுத்த உஷ்ணம் பெருக்குவது எப்படி ?

நமது மண்டையில் தினமும் நாம் சாப்பிடும் ஆகார சத்து சேர்ந்து சேர்ந்து சக்தி தருகிறது. அதோடு அங்கிருக்கும் அழுக்கு கோழை வெளியேறாது தங்கி விடுகிறது. பிறக்கும் போது தலை உச்சி மெல்லிய தோல் மூடி இருபது, வளர வளர கெட்டிப்பட்டு கடினமாகிறது!? இதுவே குண்டிகை மாசு.! சராசரி  மனிதன்
நிலை இதுவே! கோழை அதிகமாகி தொண்டையில் இறங்கி மூச்சு விட முடியாமல் மூச்சடைத்து இறக்கிறான் மனிதன்! நம் உடம்பில் உச்சியில் இருந்து உள்ளங்கால் வரை அழுக்கே நிரம்பியிருக்கிறது! மல ஜலம் மட்டுமல்ல தலை உச்சியில் கோழை கண்ணில் பீழை மூக்கில் சளி காதில் அழுக்கு வாயில் எச்சில் தொண்டையில் நெஞ்சில் கபம் உடலெல்லாம் வியர்வை கைகால் நகங்களில் அழுக்கு இப்படி அழுக்கு மூட்டையே நம் உடம்பு! தினமும் குளித்து நமது புற உடலை தூய்மையாக்கினால் மட்டும்
போதாது! நல்ல ஆகாரத்தில் கூடுமான வரை எந்த அழுக்கும் வராமல் ஓரளவு காக்கலாம்!

உடலில் எந்த அழுக்கும் வராமல் சேராமல் காக்க ஒரே வழி ஞான தவம்! கண்ணை விழித்திருந்து தவம் செய்தால் ஏற்படும் சுத்த உஷ்ணம் உடல் முழுவதும் பரவி எல்லா அழுக்கையும் வெளியேற்றுகிறது!?
ஜன்ம ஜன்மந்திரமாய் உள்ள மும்மல அழுக்கையும் வெளியேற்றி நம் உடலை தூய்மையாக்கும்! மலம்  இல்லாத விமலன் இறைவன் நகர் நம் சிற நாடு உள்போ! தூய்மையாகு!


Tuesday, 23 October 2012

ஆசை வேண்டாம்

நக்கீரர் நெற்றி கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று சொன்னாரே, சிவ பெருமான் ஆச்சே அவரை நாம் சொல்லலாமா என்று நினைச்சார நக்கீரர்?  நீ சிவனா இருந்த என்ன எவனா இருந்த என்ன? "நெற்றி கண் திறப்பினும் குற்றம் குற்றமே".  அது தான் ஞானம். தப்புன்னா தப்பு தான்!  அதுலே உனக்கு
மட்டும் எதுக்கு எக்ஸ்கூஸ், படைத்தவன் நீயே இப்படி தப்பு பண்ணிட்டு இருந்த பின்னே  மற்றவர்கள் எப்படி இருப்பாங்க.உண்மையை சொல்லணும் சத்தியத்த சொல்லணும். யாருக்கும் பய பட வேண்டியது  இல்லை
தைரியமா சொல்லலாம். இறைவன் நம்ம பக்கம் தான் உள்ளான். உண்மையை தான் சொல்லுறோம், நல்லது தானே சொல்லுறோம். அப்புறம் என்ன.
நாம் சொல்வது நாட்டில் போலிகள் உள்ளான், ஏமாத்துறான், இப்படி எல்லாம் சொல்லி எச்சரிக்கை கொடுக்கிறோம்.

எல்லாவற்றுக்கும் ஆசை படு என்று ஒருத்தர் சொல்லுறார். எந்த வகையில் நியாயம்.நம் நாட்டின் சனாதன தர்மம் சொல்வது 'ஈசனோடு ஆயினும் ஆசையை அறுமின்'  ஆசையே படாதே பற்று அற்று வாழ். இது ஞானத்தின் போதனை. நீங்க எல்லாவற்றுக்கும் ஆசை படு என்றால், எவ்வளவு
பெரிய தப்பு. முட்டாள் தனம். இதை கேட்க கூடாதா? கீழ் தரமானவர் என்று இதில் இருந்து தெரிகிறது. சிந்தனையே இல்லமால் செம்மறி ஆட்டு கூட்டம் போலே ஒவ்வொரு சாமிக்கும் பின்னாலே போய் கொண்டு  இருக்கிறான்.
உண்மை சத்தியம் நேர்மை ஒழுக்கம் பண்பாடு கலாச்சாரம் இது தான் நமக்கு வேண்டும். அது தான் நமது சனாதன தர்மம். நீதி நேர்மை ஒழுக்கம் வேண்டும். இல்லை என்றால் அவர் என்ன பேசினாலும் பிரயோஜனம் இல்லை.

யாரை எல்லாம் இந்த உலகத்தில் போற்றுகிறார் என்று பாருங்கள். ராமகிருஷ்ணர், அப்பழுக்கு இல்லாத ஒரு பக்தர், குழந்தை  மாதிரி, விவேகனந்தர் அவரை சோதிப்பதற்கு ஒரு ரூபா நாணயத்தை தலையணை அடியில் வைத்தார். இவர் வந்து படுத்தார். துள்ளி எழுந்தார். அவ்வளவு தூரம் பணம் பொருள் மேல் பற்று இல்லை. தலையணை அடியில் இருக்குன் எப்படி உணர்ந்தார்? அவ்வளவு அதிர்வு. அதை உணரும் அளவுக்கு ஆன்மா சுத்தமாக இருக்கும். அவர்தான் ஞானி. எல்லா வற்றுக்கும் ஆசை படு என்று சொல்பவன் ஒரு  பாவி.


உலகில் அதிக படியான மக்கள் எல்லாவற்றுக்கும் ஆசை படும் மக்கள். அவர்களை இழுக்க வேண்டும் என்று சொன்னால் அப்படி சொன்னால் தான் இழுக்க முடியும்..சும்மாவே ஒரு டன் ஆசை இருக்கும். இப்படி சொல்லி விட்டால் அவ்வளவு  தான் சாதாரண மக்கள் எப்படி புரிந்து கொள்வான்?