Tuesday, 13 November 2012

ஆளுடைய அடிகள் அருண்மாலை


தேசகத்தில் இனிக்கின்ற தெள்ளமுதே மாணிக்க
வாசகனே
ஆனந்த வடிவான மாதவனே
மாசகன்ற நீதிருவாய் மலர்ந்ததமிழ் மாமறையின்
ஆசகன்ற அனுபவம்நான் அனுபவிக்க அருளுதியே


நமது தேகத்தில் இனிக்கின்ற தெள்ளிய அமுது அமுது போன்றவனே !
மாணிக்கவாசக பெருந்தகையே! சதா ஆனந்த வடிவமான மாதவம் செய்தவனே,மாதவனே!குற்றம் ஒன்றுமிலா நீ திருவாய் மலர்ந்து அருளிய திருவாசகம் எனும் தமிழ்மா மறையின் முழுமையான வேறு ஒன்றுமின்றி விளங்கும் சிவ அனுபவத்தை நான் பெற உன் பரிபூரண நல்லருள் தருவாயே!

No comments:

Post a Comment