Friday, 9 November 2012

காமத்தை என்ன செய்வது ? வாலை அருள் பெறுவது?

சித்திபெற விந்து நிலை மூலந்தனை
சிதறாமல் கட்டினவன் சித்தன் சித்தன்
சத்தியமே தவறாம லிருக்க வேணும்
தன்னுயிர் போல்  மன்னுயிரை காக்க  வேணும்.

தவ  சீலர்கள் விந்துவை பாழிலே  விடக்கூடாது ! பாழாய்  போவர்!
பிரமச்சர்யம் மிக மிக அவசியம்! கல்யாணம் பண்ணாமல் இருக்க
சொல்லவில்லை! கல்யாணம் பண்ணுவது வரை உத்தம பிரமச்சாரியாக  இருக்க வேண்டும்! கல்யாணத்திற்கு பின் தன் மனைவியோடு மட்டும் கூடலாம். சந்தான விருத்திக்கு மட்டுமே விந்து விடலாம்! இல்லற வாசிகள் ஆபாச பட்ட சுக்கிலத்தை 15 நாள் ஒரு முறை மட்டுமே நீக்கலாம்!   


தன்  மனைவியைத்  தவிர ஏனைய பெண் கள்  அனைவரையும் தாயாகவே பாவிக்க வேண்டும். அப்படி பட்டவனே உத்தமன்! கல்யாணம் பண்ணியும் இது மாதிரி பிரமச்சாரியாக வாழலாம்! மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும்" என வள்ளலார் கூறுவதை கவனிக்க!

"காமமகற்றிய தூயன் சிவகாமி நேயன்" இறைவன் திருவடியை பற்றியவர்கள் இரட்சிக்க படுவார்கள்! நாம் காமம் கொள்ள வேண்டியது சிவத்தின் மீதே! சிவமாகிய ஒளியின் மீதே தீரக்காமம் வேண்டும்! அப்படி இருந்தால் நாம் தான் சிவகாமியாவோம்! வாலையான சிவகாமி நம்முள் துலங்குவாள்!
காமத்தை ஆட்சி செய்யும் அவளே காமாட்சி!  தாயாக - குழந்தையாக பார்த்தால் காமம் வருமோ? அபிராமி பட்டார் பார்த்தல் எல்லா பெண்களையும் தாயாக!

அப்படி விந்து கட்ட கட்ட மணியாகி ஒளியாக அற்புத ஆற்றலை பெறுவான்! அவனே சித்தன்! அது மட்டும்  போதாது சத்தியநெறி தவறாமல் வாழ வேண்டும். எவ்வுயிரும் தன்னுயிர் போல கருத வேண்டும்.
அப்படிப்பட்ட பரோபகாரியே வாலை  அருள் பெறுவான்! சிந்தை தடுமாற சித்தன்  ஆவான்

ஞான சற்குரு சிவசெல்வராஜ் 
தங்க ஜோதி ஞான சபை
கன்னியாகுமரி 

No comments:

Post a Comment