Wednesday, 14 November 2012

சிற்சபை விளக்கம்

சோறுவேண்டினும் துகில் அணி முதலாம்
சுகங்கள் வேண்டினும் சுகமலால் சுகமாம்
வேறு வேண்டினும் நினை அடைந் தன்றி
..
உண்ண உணவு உடுக்க உடை இருந்து சுகமாக வாழ வேண்டிய வீடும் கிட்டினால் போதுமா? இதுவல்ல பூரண வாழ்க்கை! சுகமான வாழ்க்கை! வேறு எது கிடைத்தாலும் பிரயோஜனமில்லை! எல்லா ஞானிகளும் கூறியது என்ன தெரியுமா? இறைவைனை அடைவதொன்றே பேரின்பம் தரும்! மற்றெல்லாம் சிற்றின்பமே!இதுவே சத்தியவான் வார்த்தை! அடியேன் உணர்ந்தேன்! உன் திரு சந்நிதியின் முன் நிற்கின்றேன்! இறைவா உன் மனக்குறிப்பு அறியேன் !உன் சித்தம் எதுவோ? வடலூரில் சத்திய ஞான சபையில் கொலுவிருக்கும் தருமதுரையே! பழத்தின் சாறு போல் அன்பால் கனிந்து கருணையே உருவான மெய்யன்பர்களுக்கு அருள் புரியவே காத்து இருக்கும் தனிப்பெரும் பதியே அருட்பெருன்ஜோதியே!

No comments:

Post a Comment